சுங்கை பட்டாணி, பாக்கார் ஆராங், தாமான் பெர்பாடுவான் வீடமைப்புப் பகுதியில் பல நாட்களுக்கு நீடித்து வந்த துர்நாற்றம், ஒரு பெண்ணில் சடலத்திலிருந்து வந்ததாக நேற்று கண்டறியப்பட்டுள்ளது.
நேற்று மாலை 5.47 மணியளவில் கிடைத்த அவசர அழைப்பைத் தொடர்ந்து, அவ்விடத்திற்கு விரைந்த போலீஸ் படையினர், அக்குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு கால்வாயில், அப்பெண்ணின் சடலத்தை மீட்டதாக கோலா மூடா மாவாட்ட போலீஸ் தலைவர் எசிபி ஸைடி சே ஹஸ்சான் தெரிவித்தார்.
மேலும், இச்சம்பவத்திற்கான காரணம் குறித்து ஆராயப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.