நெகிரி செம்பிலான் மாநிலத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்வதற்கு, நூறு கோடி வெள்ளி கூடுதல் ஒதுக்கீடு வழங்க அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.
புதிய சாலைகள் மற்றும் பாலங்கள் கட்டுதல், கல்வி உள்கட்டமைப்பு, வழிபாட்டு தலங்கள் கட்டுதல் மற்றும் மருத்துவமனைகளை சீரமைத்தல் என பல்வேறு மேம்பாட்டு திட்டங்களுக்காக அரசாங்கம் இந்த கூடுதல் ஒதுக்கீட்டை வழங்கவுள்ளதாக நெகிரி செம்பிலான் மாநிலத்தின் ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் பிரதமர் இதனை தெரிவித்தார்.