பள்ளிக்கு வெளியே நடவடிக்கைகள் வேண்டாம்

நாட்டில் வெப்ப நிலை தொடர்ந்து அதிகரித்து வருவதைத் தொடர்ந்து பள்ளிக்கு வெளியே மாணவர்கள் சம்பந்தப்பட்ட எந்தவொரு நடவடிக்கையும் நடத்தப்படக்கூடாது என்று கல்வி அமைச்சர் ஃபட்லீனா சீடெக் ​மீண்டும் நினைவுறுத்தியள்ளார். குறுக்கோட்டப் போட்டி, விளையாட்டு போன்ற புறப்பாட நடவடிக்கைகளை ஒத்திவைக்குமாறு பள்ளி தலைமையாசிரியர்களையும், பள்ளி முதல்வர்களையும் ஃபட்லீனா சீடெக் கேட்டுக்கொண்டார். இது தொடர்பாக மாநில கல்வி இலாகா மூலம் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையின் வழிகாட்டலை பின்பற்றுமாறு பள்ளிப் பொறுப்பாளர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.

WATCH OUR LATEST NEWS