கம்போடியா தலைநகர் நோம்பெனில் நடைபெற்று வரும் சீ விளையாட்டுப் போட்டியில் மலேசியா மேலும் இரு தங்கப்பதக்கங்களை வென்றுள்ளது. கராத்தே போட்டியில் ஆர்.ஷமேன்ரனும், எச்.சூரிய சங்கரும் தலா ஒரு தங்கத்தை வென்று மலேசியாவிற்குப் பெருமை சேர்த்துள்ளனர். இத்துடன் மலேசியா 4 தங்கங்களை வென்றுள்ளது. நேற்று பெண்களுக்கான கராத்தே போட்டியில் சி. ஷாமளா ராணி முதல் தங்கத்தையும், மற்றொரு கராத்தே வீரரான எஸ்.பிரேம் குமார் இரண்டாவது தங்கத்தையும் பெற்று தந்தனர். இன்று மூன்றாவது மற்றும் நான்காவது தங்கத்தை முறையே ஆர்.ஷமேன்ரனும், எச்.சூரிய சங்கரும் பெற்றுத் தந்து நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளனர்.