டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நாட்டின் பிரதமராக பொறுப்பேற்றது முதல், அவர் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டதற்கான மொத்த செலவினத்தை அறிவிக்க புத்ராஜெயா மறுத்து விட்டது.
இது தொடர்பாக அலோர் ஸ்டார், பெரிக்காத்தான் நேஷனல் எம்.பி. அஃப்னான் ஹமிமி தயிப் அஸாமுடின் நாடாளுமன்றத்தில் முன்வைத்த கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை. குறிப்பாக, பிரதமர் அன்வார் பயணம் மேற்கொண்ட நாடுகளுக்கு அவர் பயன்படுத்திய jet விமானத்திற்கான செலவினத்தை அறிய தாம் விரும்புவதாக அந்த பெரிக்காத்தான் நேஷனல் எம்.பி. கேள்வி எழுப்பியிருந்தார்.