தம்பதியருக்கு 12 மாத சிறை

பசார் ராயா ஒன்றில் 6 ஆயிரம் வெள்ளி பெருமானமுள்ள 20, ஃபோர்முலா பால் பெட்டிகளைத் திருடிய குற்றத்திற்காக ஒரு தம்பதியருக்கு மலாக்கா மஜீஸ்திரேட் நீதிமன்றம் இன்று 12 மாத சிறைத் தண்டனை விதித்தது.

39 வயது முகமட் அஸ்லி இப்ராஹிம் மற்றும் அவரின் 31 வயது மனைவி நூர் பாயா அப்துல் மனாஃப் ஆகிய இருவரும் தங்களுக்கு எதிரான குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து மஜீஸ்திரேட் மஸானா சினின் தண்டனை விதித்தார்.

இவ்விருவரும் கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதி மலாக்காந்தெங்கா, ஆயய் குரோ நெஞ்சாலையிலுள்ள AEON பேரங்காடியில் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

WATCH OUR LATEST NEWS