மாநில பொதுத் தேர்தல்களுக்கு பிறகு சாயிட் அமிடி விலகி கொள்ள வேண்டும்

ஒருவேளை மாநில பொதுத் தேர்தல்களில் பக்காத்தான் ஹரப்பான் மற்றும் பாரிசான் நேசனல் தோல்வி கண்டால் சாயிட் அமிடி விலகி கொள்ள வேண்டும் என பாஸ் கட்சியின் தகவல் பிரிவு தலைவர் கைரில் நிஸாம் கிருடின் தெரிவித்துள்ளார். சாயிட் அமிடி வருகின்ற மாநில பொது தேர்தலில், மக்கள் யார் பக்கம் நிற்கின்றார்கள் என்பதை முகிடின் யாசின் தெரிந்து கொள்ளட்டும் என வெளியிட்ட கருத்தையொட்டி அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கடந்த 15வது பொது தேர்தலின்போது பாரிசான் நெசனல் 30 இடங்களை மட்டும் கைப்பற்றி மிக மோசமான பின்னடைவை எதிர் நோக்கி உள்ளதை சாயிட் அமிட் இன்னும் உணரவில்லை என கைரில் நிசாம் தெரிவித்தார்.

பக்காத்தான் ஹரப்பான் மற்றும் பாரிசான் நெசனல் இடையே நடந்து வரு உட்பூசல் மிக விரைவில் வெட்ட வெளிச்சத்திற்கு வரும் என பாஸ் கட்சி நம்புவதால், பக்காத்தான் ஹரப்பான் மற்றும் பாரிசான் நெசனல் வருகின்ற மாநில பொது தேர்தலில் தோல்வி யுற்றால் மரியாதை நிமித்தமாக சாயிட் விலகி விட வேண்டும் என அவர் மேலும் கூறினார்.

WATCH OUR LATEST NEWS