ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் உயிரிழந்தனர்

காரும் லோரியும் மோதிக் கொண்ட கோர சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்ததுடன், மேலும் இரண்டு சிறார்கள் கடும் காயங்களுக்கு ஆளாகினர்.

இச்சம்பவம் இன்று மாலை 4.06 மணியளவில் கெடா, கூலீம், பாடாங் மெஹா, ஜாலான் கூலிம்-பாலிங் சாலையில் நிகழ்ந்தது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அறுவர் பயணம் செய்த பெரோடுவா பெஸ்ஸா காரை, டிரெய்லர் லோரி ஒன்று மோதி தள்ளியதாக மலேசிய தீயணைப்பு,மீட்புப்படையின் கெடா மாநில பொது உறவு அதிகாரி அப்துல் ரஹ்மான் சோ ஒமார் தெரிவித்தார்.

இதில் 32 வயது ஆடவர், 30 மற்றும் 59 வயதுடைய இரண்டு பெண்கள், எட்டு மாத கைக்குழந்தை ஆகியோர் சம்பவ இடத்திலேயே மாண்டதாக அப்துல் ரஹ்மான் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS