வெள்ளிக்கிழமை கூடுதல் விடுமுறை

வரும் வியாழக்கிழமை கொண்டாடப்படவிருக்கும் ஹாஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு சிலாங்கூர் மாநில அரசு நிர்வாகத்தின் கீழ் உள்ள அரசு ஊழியர்களுக்கு வரும் வெள்ளிக்கிழமை ஒரு நாள் கூடுதல் விடுமுறை வழங்குவதற்கு மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
வரும் வியாழக்கிழமை பொது விடுமுறை வழங்கப்படும் வேளையில் மறுநாள் வெள்ளிக்கிழமை இந்த கூடுதல் விடுமுறை மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவதாக சிலாங்கூர் மாநில அரசு செயலாளர் டத்தோ ஹரீஸ் கசிம் தெரிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS