இருவர் உயிர்த்தப்பினர்

கெடா பாடாங் மெஹா, ஜாலான் கூலிம் பாலிங் சாலையில் கார் ஒன்று த்ரெலர் லோரியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் நால்வர் உயிரிழந்த வேளையில், மேலும் இருவர் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பி, கூலீம் மருத்துவமனையில், சிவப்பு மண்டலப் பகுதியில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 4 மணியளவில், நிகழ்ந்த இச்சம்பவத்தில் 2 வயது குழந்தையும், 14 வயது இளைஞனும் கடுங்காயங்களுக்கு ஆளாகி தற்போது தீவிர சிகிச்சைப் பெற்று வருவதாக கூலீம் மாவட்ட போலீஸ் தலைவர் சுபெரிதென்டன் முகமட் ரெட்சுவான் சாலெஹ் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS