தாயாரை கொன்றதாக மகன் மீது குற்றச்சாட்டு

தமது சொந்த தாயாரை கோடாரியினால் வெட்டிக் கொன்றதாக நபர் ஒருவர் மூவார் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார். 47 வயதான லிம் செங் சாய் என்ற அந்த நபர் கடந்த ஜுன் 18 ஆம் தேதி இரவு 8.20 மணியளவில் மூவார், தாமான் தெமியாங் உத்தாமாவில் உள்ள வீட்டில் தமது தாயார் 73 வயதுடைய தான் சூ கெக் என்பவரை கொன்றதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் மரணத் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் அந்த நபர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளதால் அவரிடமிருந்து எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.

இவ்வழக்கு விசாரணை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்படுவதற்கு ஏதுவாக வழக்கு, வரும் ஜுலை 27 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதற்கு மாஜிஸ்ட்ரெட் அனாலியா கமாருடின் அனுமதி அளித்தார்.அதேவேளையில் சம்பந்தப்பட்ட நபரை மனநல பரிசோதனைக்கு உட்படுத்தமாறு பிராசிகியூஷன் தரப்புக்கு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

WATCH OUR LATEST NEWS