விரைவில் நடைபெற விருக்கும் ஆறு மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலில், தன்னிச்சையாக போட்டியிடும் மூடா கட்சியின் நிலைப்பாடு ஒரு துணிச்சலான நடவடிக்கையாகும் என்று அம்னோவின் முன்னாள் தகவல் பிரிவுத் தலைவர் ஷரீல் சுப்பியான் ஹம்டான் தெரிவித்துள்ளார்.
அரசியலில், இரண்டாம் தர கட்சியாக நடத்தப்படாமல், மூடா ஒரு நிலைப்பாட்டை வைத்திருக்க வேண்டிய நேரம் என்பதால், அக்கட்சி தன்னிச்சையாக போட்டியிடும் இந்த துணிச்சலான நடவடிக்கையைத் தமது கட்சி வரவேற்பதாக ஷரீல் சுப்பியான் ஹம்டான் குறிப்பிட்டார்.