அடுத்த புதன்கிழமை ஜூலை 5 ஆம் தேதி முதல் கோவிட் – 19 நோயாளிகள், முகக் கவரி அணிய வேண்டிய அவசியம் இல்லை என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
கோவிட் 19 நோர் தொற்று இருப்பவர்கள் சுகாதார வசதிகளில் இருக்கும்போது, முகக் கவரியை அணிவது கட்டாயமில்லை என்று இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் சுகாதார அமைச்சர் டாக்டர் ஜலேஹா முஸ்தபா இதனைத் தெரிவித்தார்.
மேலும், கோவிட் 19 னால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தும் காலக்கட்டமும் 7 முதல் 5 நாட்கள் வரை குறைக்கப்பட்டுள்ளதாகவும், இது அடுத்த புதன்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் என்றும் டாக்டர் ஜாலேஹா முஸ்தபா குறிப்பிட்டார்.