மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில், நெகிரி செம்பிலான் மாநில சட்ட மன்றம் வரும் சனிக்கிழமை ஜூலை முதல் தேதி கலைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விரைவில் நடைபெறவிருக்கும் தேர்தலுக்கு, வரும் ஜூலை முதல் தேதி மாநில சட்டமன்றத்தைக் கலைக்க, நெகிரி செம்பிலான் மாநில ஆளுனர் துங்கு முஹ்ரீஸ் இப்னி அல்மர்ஹும் துவான்கு முனாவீர் ஒப்புதல் அளித்துள்ளதாக மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ அமினுடின் ஹருன் தெரிவித்துள்ளார்.