ஜொகூர் குளுவாங் கொன்வென்ட் இடை நிலைப் பள்ளியின் சமிஞ்சை விளக்கின் அருகில் முக்கிய நீர் குழாய் ஒன்று உடைந்ததால் அவ்வட்டாரத்தை சுற்றி உள்ள 26,000 பாதிப்புக்குள்ளாகி உள்ளது என அம்மாநிலத்தின் பொதுசேவை, போக்குவரத்து, பிரிவின் தலைவர் மொஹமாட் ஃபஸ்லி மொஹமாட் சாலெஹ் தனது முகநூல் பக்கத்தின் வழி தெரிவித்துள்ளார்.
முதன்மை நீர் குழாயை சரி செய்வதற்கு குறைந்த பட்சம் 15 மணி நேரம் எடுக்கும் எனவும் நாளை குழாய் பழுது பார்க்கும் பணி முடிவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் மேலும் கூறினார்.