இன்று மதியம் மூன்று மணிக்கு மலேசிய வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையின் படி புக்கேட் கடல் பகுதிகளில் 50 முதல் 60 வேகம் அளவு காற்று வீசுவதுடன் 3.5 மீட்டர் உயரம் அளவு கடல் அலைகள் எழும்ப சாத்தியங்கள் இருப்பதினால் மீன் பிடித்தல் மற்றும் ஃப்ரி சேவை நிறுத்தி வைக்கப்படும் என அறிவித்துள்ளது.
மேலும் மலேசியாவில் உள்ள ஜொகூர் , பகாங் திரங்கனு, கிளந்தான், சபா, சரவாக் மாநிலங்களில் இடியுடன் கூடிய கனத்த மழை பெய்ய உள்ளதால் படகு சவாரிக்கு உகந்ததில்லை என அது தெரிவித்துள்ளது.