பேராக் கிரிக் வட்டாரத்தில் அமைந்துள்ள குடில் ஒன்றில் பிண வாடை வீசியதை தொடர்ந்து அங்கு 43 வயது ஆடவர் இறந்து கிடந்துள்ளார் என பேராக் மாநில போலீஸ் தலைவர் டத்தோ செரி மொஹமாட் யுஸ்ரி ஹஸ்ஸான் பஸ்ரி தெரிவித்தார்.
கம்போங் பாரித் ரப்பர் தோட்டத்தில் அமைந்துள்ள தனக்கு சொந்தமான அந்த குடிலில், மேல் சட்டை மற்றும் காலணி இல்லாது அந்த ஆடவர் இறந்து கிடந்துள்ளார். அந்த ஆடவர் கொலை சம்பவத்திற்கு ஆளான எந்த அறிகுறிகளும் தென்படாத நிலையில், இறந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக யுஸ்ரி ஹஸ்ஸான் பஸ்ரி மேலும் தெரிவித்தார்.