குற்றச்சாட்டை மறுத்தது போலீஸ்

போதைப்பொருள் தொடர்பாக முக்கிய அரசியல்வாதி ஒருவரின் மகன் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுவதை போலீசார் மறுத்துள்ளனர். அந்த குற்றச்சாட்டில் உண்மையில்லை என்று லங்காவி மாவட்ட போலீஸ் தலைர் ஷரிமான் அஷாரி தெரிவித்தார்.

எனினும் போதைப்பொருள் தொடர்பில் இரு நபர்கள் கைது செய்யப்பட்டு இருப்பதை ஷரிமான் அஷாரி உறுதி படுத்தினார். லங்காவியில் போலீசார் நடத்திய அந்த திடீர் சோதனையில் உள்ளூர் ஆடவர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

ஆனால், அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு இதில் தொடர்பு இல்லை என்று அவர் விளக்கினார்.

WATCH OUR LATEST NEWS