வாகனமோட்டி ஒருவர், ஐஸ் லோரியில் மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே மாண்டார். இச்சம்பவம் இன்று பிற்பகல் 2.50 மணியளவில் ஜோகூர், ஜாலான் மெர்சிங் – குளுவாங் சாலையின் பத்து தீகா கேம் அருகில் நிகழ்ந்தது. காரில் பயணம் செய்த 51 வயது நபர், காரின் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி மரணமுற்றதாக தீயணைப்பு, மீட்புப்படையினர் தெரிவித்தனர்.
சின்னாபின்னமான காரிலிருந்து அந்த ஆடவரின் உடலை மீட்பதற்கு தீணைப்பு, மீட்புப்படையினர் பிரத்தியேக சாதனங்களை பயன்படுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.