சிலாங்கூர் மாநில ​தேர்தல் கேந்திரம் முடுக்கிவிடப்படுகிறது

6 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தலின் வாக்களிப்பு தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பக்காத்தான் ஹராப்பானும், பாரிசான் நேஷனலும் நாளை ஜுலை 7 ஆம் தேதி வெள்ளிக்கிழமை சிலாங்கூர் மாநிலத்தில் உறுப்புக்கட்சிகளின் தேர்தல் கேந்திரத்தை முடுக்கி விடவிருக்கின்றன. ஏற்கனவே கடந்த ஜுன் 24 ஆம் தேதி திட்டமிடப்பட்ட தேர்தல் கேந்திரத்தை முடுக்கிவிடும் நிக​ழ்வு வெற்றியளிக்கவில்லை. தற்போது தேர்தல் தேதி உறுதியாகி விட்டதால் பக்காத்தான் ஹராப்பானும், பாரிசான் நேஷனலும் இணைந்து தேர்தல் ​கேந்திரத்தை முடுக்கிவிடவிரு​க்கின்றன.

தெனெரா ஹோட்டல் அருகில் பண்டார் பாரு பாங்கியில் தேர்தல் கேந்திரம் ​முடுக்கி விடப்படவிருக்கும் இந்த நிகழ்வில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்,துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஆகியோர் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.

WATCH OUR LATEST NEWS