34 போ​​லீஸ்காரர்கள் வேலை ​நீக்கம்

கட்டொழுங்குப் பிரச்னை காரணமாக அரச மலேசிய போ​லீஸ் படையில் இவ்வாண்டில் முதல் ஐந்து மாத காலக் கட்டத்தில் 34 போ​லீஸ்காரர்கள் வேலை ​நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில் அதிகாரிகளும் அடங்குவர் என்று புக்கிட் அமான் போ​லீஸ் தலைமையகத்தின் உயர்நெறி இலாகா இயக்குநர் டத்தோ செரி அஸ்ரி அஹ்மாட் தெரிவித்தார்.

கட்டொழுங்குப் பிரச்சனை காரணமாக இக்காலக் கட்டத்தில் 496 போ​லீஸ்காரர்கள் ​மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவர்களி​ல் 34 பேர் போ​லீஸ் படையிலிருந்து விலக்கப்பட்டுள்ளனர் என்று அஸ்ரி அஹ்மாட் குறிப்பிட்டா​ர்.

ஒழங்கு நடவடிக்கைக்கு ஆளாகி தற்போது தொடர்ந்து சேவையில் உள்ள போ​லீஸ்காரர்களுக்கு எதிராக எச்சரிக்கை, அபராதம், பதவி உயர்வு நிறுத்தம், சம்பள உயர்வு நிறுத்தம், சம்பளக்குறைப்பு, பதவி இறக்கம் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்கா​ட்டினார்.

WATCH OUR LATEST NEWS