வரும் சட்டமன்றத் தேர்தலில் மஇகாவும், மசீச.வும் போட்டியிடவில்லை என்ற போதிலும் சிலாங்கூர் மாநிலத்தில் பக்காத்தான் ஹராப்பான் மற்றும் பாரிசான் நேஷனல் வெற்றியை உறுதி செய்வதற்கு அவ்விரு கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும் என்று சிலாங்வர் மந்திரி புசார் அமிருடின் ஷாரி கேட்டுக்கொண்டார்.
சட்டமன்றத் தேர்தலில் உறுப்புக்கட்சிகள் அனைத்தும் வெற்றியை நோக்கி பயணிக்க ஒருமைப்பாட்டு உணர்வு அவசியமாகும். அந்த வகையில் மஇகாவும், மசீச.வும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட களம் இறங்க வேண்டும் என்று அமிருடின் வலியுறுத்தியுள்ளார்.