6 மாநிலங்களின் தேர்தல் சுமூகமாக நடைபெறும்

வரும் ஆறு மாநிலங்களின் தேர்தல் அமைதியாகவும், சுமூகமாகவும் நடைபெறும் என்ற அரச மலேசிய போலீஸ் படை உத்தரவாதம் அளித்துள்ளது.

மக்கள் தங்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்றுவதில அச்சம் கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று போலீஸ் படைத் தலைவர் டன் ஸ்ரீ ரசாருடின் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

ஆறு மாநிலங்களின் தேர்தல் எவ்வித இடையூறின்றி சுமூகமாக நடைபெறுவதற்கு அரச மலேசிய போலீஸ் படையின் குற்றப்புலனாய்வுத்துறை, உளவுத்துறை ஆகியற்றின் அதிகாரிகள் மற்றம் உறுப்பினர்கள் பதற்றம் நிறைந்த பகுதிகளில் அதிகளவில் நிறுத்தப்படுவார்கள் என்று ரசாருடின் ஹுசைன் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS