நெகிரி செம்பிலான் சட்டமன்றத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் மற்றும் பாரிசான் நேஷனல் கூட்டணி வெற்றிப் பெறுமானால் டத்தோ ஸ்ரீ அமினுடின் ஹாரூன் மீண்டும் மந்திரி புசாராக நியமிக்கப்படுவதற்கான சாத்தியம் உள்ளது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கோடிகாட்டியுள்ளார்.
எனினும் இது குறித்து கூட்டணி கட்சிகள் தீர்க்கமாக பேசி முடிவு எடுக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
நெகிரி செம்பிலான் மந்திரி பெசராக தற்போது அமினுடின் ஹாரூன் பதவியில் இருப்பதால் தேர்தல் பிரச்சாரத்தின் போது, சுவரொட்டியில் அவரின் புகைப்படத்தை முன்கூட்டியே அச்சிடுவதில் தவறுயில்லை என்றும் அன்வார் தெரிவித்தார்.