லவ் ஸ்கேம் மோசடியில் சிக்கிய மாது 25 லட்சம் வெள்ளியை இழந்தார்

தன்னை கொரியப் பிரஜை என்று அடையாளம் கூறிக்கொண்டு இன்ஸ்டாகிராம் தொடர்பில் இருந்த ஆடவரின் காதல் வலையில் விழுந்ததாக நம்பப்படும் தனியார் நிறுவனம் ஒன்றின் பெண் நிர்வாகி, தமது வாழ்நாள் சேமிப்பான 25 லட்சம் வெள்ளி இழந்துள்ளார்.

இத்தாலியில் தொழில் புரிவதாக கூறி அந்த மாதுவுடன் ஓன்லைன் தொடர்பில் மிக நெருக்கமாக இருந்ததாக நம்பப்படும் அந்த ஆடவர், தனது தொழிலில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி, மோசடி செய்துள்ளார் என்று புகார் அளிக்கப்பட்டுள்ளதாக சபா போலீஸ் ஆணையர் டத்தோ ஜெயதேஹ் டிகுண் தெரிவித்துள்ளார்.

கோத்தா கினபாலுவில் பெரிய நிறுவனம் ஒன்றில் முக்கியப் பொறுப்பு வகித்து வரும் 46 வயதுடைய அந்த மாது, இவ்வாண்டு மே மாதத்திற்கும் ஜுலை மாதத்திற்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் அந்த ஆடவர் அனுப்பிய 24 வெவ்வேறு வங்கி கணக்குகளில் 25 லட்சத்து 31 ஆயிரம் வெள்ளியை பட்டுவாடா செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. பணத்தைப் பெற்றப்பின்னர் அந்த ஆடவர் தொடர்பிலிருந்து தன்னை துண்டித்துக்கொண்டதைத் தொடர்ந்து தாம் ஏமாற்றப்பட்டு விட்டதாக உணர்ந்த அந்த மாது போலீசில் புகார் செய்து இருப்பதாக டத்தோ ஜெயதேஹ் டிகுண் குறிப்பிட்டுள்ளார்.

WATCH OUR LATEST NEWS