சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தலைமையிலான மாநில அரசு, கடந்த 2018 முதல் 2023 வரையில் அடைந்த சாதனைகளை விவரிக்கும் அதன் ஐந்தாண்டு அறிக்கை அட்டையை வெளியிட்டது.
மாநிலத்தில் அமல்படுத்தப்பட்ட ஏராளமான மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் மற்றும் முன்னெடுப்புகள் குறிப்பாக, நோய்த் தொற்றுப் பரவலுக்குப் பிந்தைய மாநிலத்தின் பொருளாதாரத்தை ஊக்குவிக்க பக்காத்தான் ஹராப்பான் தலைமையிலான நிர்வாகம் செய்த சாதனைகள் 161 பக்கங்களை உள்ளடக்கிய ஆவணத்தில் விவரிக்கப்பட்டுள்ளன.
இவை தவிர, மாநிலத்தின் எதிர்காலத் திட்டங்களும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.
“சிலாங்கூரின் செழிப்பான மற்றும் பொன்னான ஐந்தாண்டுகள்” என்ற தலைப்பில் 2018 முதல் 2023 வரையிலான சிலாங்கூர் மாநில அரசின் சாதனை மற்றும் வெற்றி அறிக்கையை வெளியிடுவதில் தாம் மகிழ்ச்சி அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.