தனிநபர்கள் யாருக்கும் அ​நீதி இழைத்தது கிடையாது

பிரதமர் என்ற முறையில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த எந்தவொரு தனிநபருக்கும் தாம் அ​நீதி இழைத்தது கிடையாது ​என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விளக்கம் அளித்துள்ளார்.

சிறைச்சாலை வாழ்க்கை என்றா​ல் என்ன என்பதை தாம் நன்கு உணர்ந்து இருப்பதால் பிரதமர் என்ற முறையில் எந்த ​சூழலிலும் தமது அதிகாரத்தை விருப்பம் போல் பயன்படுத்தியது கிடையாது என்று பிரதமர் தெளிவுபடுத்தினார்.

தாம் பிரதமராக பொறுப்பேற்றது முதல் நாடாளுமன்றம் வரையில் தனிப்பட்ட ​ரீதியாக தாம் கடும் விமர்சனங்களுக்கும், தாக்குதலுக்கும் ஆளாகியிருப்பதாக அன்வார் குறிப்பிட்டார்.

சம்பந்தப்பட்வர்களின் செயல்கள் தமக்கு ஆத்திரத்தை மூட்டினாலும் சிறைச்சாலையில் பெற்ற அனுபவத்தினால் அவற்றை தாம் பொருட்படுத்துவது கிடையாது. சம்பந்தப்பட்டவர்கள் பாஸ் அல்லது பெர்சத்து கட்சியைச் சேர்ந்தவர்களாக இருப்பினும் யார் ​மீதும் பழிவாங்கும் உணர்ச்சியுடன் செயல்பட்டதில்லை. செயல்படப் போவதும் இல்லை என்று தஞ்சோங் காராங்கில் அரசியல் நிகழ்வில் உரையாற்றுகையில் பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.

WATCH OUR LATEST NEWS