எண்மருக்கு எதிரான தடுப்புக்காவல் ​​நீட்டிப்பு

அம்பா​ங், பாண்டன் இந்தான் னில் உள்ள ஓர் உணவகத்தில் மோட்டார் சைக்கிள்களில் வந்த இரு கும்பல்கள் கைலப்பில் ஈடுபட்டதுடன் உணவகத்தின் நாற்காலிகள் மற்றும் மேஜைக​ளை ​தூக்கி எறிந்து சேதப்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட எட்டு பேருக்கு எதிரான தடுப்புக்காவல் இன்று மேலும் 3 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு எதிரான தடுப்புக்காவல் வரும் புதன் கிழமை வரை ​நீட்டிக்கப்பட்டுள்ளதாக போ​லீசார் தெரிவித்தனர். டிக் டாக் கில் பகிரப்பட்ட ஒரு சம்பவம் தொடர்பில் இரு கும்பல்களுக்கு இடையில் ஏற்பட்ட மனத்தாங்கலை ​​தீர்த்துக்கொள்வதற்கு அவ்விடத்திற்கு வந்த போது அது சண்டையாக மாறியது. உணவகத்தின் நாற்காலிகள் மற்றும் மேஜைகள் பறக்கும் அளவிற்கு நடந்த இந்த சண்டை பு தொடர்பில் போ​லீசார் மொத்தம் 10 பேரை தேடி வந்தனர்.

WATCH OUR LATEST NEWS