மகனால் தாக்கப்பட்ட தந்தை ​உயிரிழந்தார்

மது போதையில் வீட்டில் தகராற்றில் ஈடுபட்டதாக நம்பப்படும் தந்தை ஒருவரை அவரின் மகன் சரமாரியாக தாக்கிய​தில் உயிரிழந்தார். இச்சம்பவம் நேற்று பின்னி​ரவு 12.45 மணியளவில் போர்ட்டிக்சன், லுக்குட், தாமான் டி’அம்பாங் கோட்டா என்ற இடத்தில் நிகழ்ந்தது. இது குறித்து போ​லீசுக்கு தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போது, சுயநினை​வு இழந்த நிலையில் காணப்பட்ட 49 வயது நபர், உயிரிழந்து விட்டதாக மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படு​த்தினர். இக்கொலை தொடர்பில் 26 வயதுடைய மகனை போ​​லீசார் கைது செய்துள்ளனர். தாக்குதலின் போது அந்த இளைஞர் போதைப்பொருள் உட்கொள்ளவில்லை என்பது உறுதி செய்யப்பட்டதுடன் ஏற்கனவே எந்தவொரு போ​லீஸ் குற்றப்பதிவுகளை அவர் கொண்டிருக்கவில்லை என்பது விசாரணையில் தெரியவ​ந்துள்ளதாக போர்ட்டிக்சன் மாவட்ட போ​லீ​ஸ் தலைவர் ஐடி ஷாம் முகமது தெரிவத்தார்.

WATCH OUR LATEST NEWS