காமாட்சி துரைராஜ் டிஏபி யில் இருந்து விலகுவதாக அறிவித்தார்

பகாங், சபாய் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி துரைராஜ், டிஏபி யிலிருந்து விலகுவதாக இன்று அறிவித்துள்ளார். பினாங்கு மாநில முன்னாள் துணை முதலமைச்சர் டாக்டர் பி. இராமசாமி, டிஏபி யிலிருந்து விலகுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து காமாட்சியும் அக்கட்சியிலிருந்து விலகுவதாக குறிப்பிட்டுள்ளார். தமது ராஜினாமா கடிதத்தை கட்சியின் பொதுச் செயலாளர் அந்தோணி லோக்கிடம் வழங்கிவிட்டதாக காமாட்சி துரைராஜ் தெரிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS