சனிக்கிழமை நடைபெறும் மாநில சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மாநில அரண்மனைகளில் போலீஸ் பாதுகாப்பு வலுப்படுத்தப்படும் என்று போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் தெரிவித்துள்ளார். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட அன்றைய இரவு சில தரப்பினர் மாநில அரண்மனைகளில் வெளி வளாகத்தில் குவியக்கூடிய சாத்தியம் இருப்பதால் முன்கூட்டியே பாதுகாப்பு வலுப்படுத்தப்படும்.
இதேபோன்று மாநில அரசாங்க கட்டடட்ஙகள் உட்பட வியூகம் நிறைந்த பகுதிகளிலும் போலீஸ் பாதுகாப்பு வலுப்படுத்தப்படும் என்று ரஸாருதீன் ஹுசைன் குறிப்பிட்டார்.
நள்ளிரவு நேரத்தில் அரண்மனை வளாகத்தின் வெளியே மக்கள் குழுமியிருப்பது, இடையூறு விளைவிப்பது போன்ற செயல்கள் அனுமதிக்க இயலாது என்று ஐ.ஜி.பி. தெளிவுபடுத்தினார்.