DAP யை விட்டு விலகும் முடிவை மறுபரிசீலனை செய்வீர்

டிஏபி யிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ள பினாங்கு முன்னாள் துணை முதலமைச்சர் டாக்டர் பி. இராமசாமி, தமது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மாநில முதலமைச்சரும், மாநில டிஏபி தலைருமான சியு கோன் யோவ் கேட்டுக்கொண்டுள்ளார்.

டாக்டர் இராமசாமியின் விலகலினால், கடந்த மூன்று தவணைக்காலமாக அவர் வகித்து வந்த பிறை சட்டமன்றத் தொகுதி தேர்தலில் டிஏபி க்கு வர வேண்டிய வாக்குகளில் சற்று பாதிப்பு ஏற்படலாம் என்று பத்து காவான் நாடாளுமன்ற உறுப்பினருமான சியு கோன் யோவ் குறிப்பிட்டார்.
பினாங்கு மாநில டிஏபி வேட்பாளர்கள் பட்டியலில் டாக்டர் இராமசாமி அதிருப்தியுற்று இருப்பதையும் சியு கோன் யோவ் சுட்டிக்காட்டினார்.

டிஏபி யிலிருந்து விலகுவதாக டாக்டர் இராமசாமியிடமிருந்து கிடக்கப்பெற்றத் தகவலைத் தொடர்ந்து அந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு அவரை இன்று காலையில் தாம் கேட்டுக்காண்டதாக பினாங்கு முதல்வர் குறிப்பிட்டார்.

டாக்டர் இராமசாமியின் விலகலினால் பக்காத்தான் ஹராப்பானுக்கு கிடைக்கக்கூடிய ஆதரவில் சரிவு ஏற்படுமா? என்று கேட்ட போது, பாதிப்பு இருக்கிறது என்பதை சியு கோன் யோவ் ஒப்புக்கெண்டார்.

காரணம், டாக்டர் இராமசாமி, தமக்கென்று தனி ஆதரவை பினாங்கில் கொண்டு இருக்கிறார். அதில் பாதிப்பு ஏற்படக்கூடிய சாத்தியம் உள்ளது என்று சியு கோன் யோவ் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS