நாளை நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் சிலாங்கூர் மாநிலத்தில் பக்காத்தான் ஹராப்பான் பாரிசான் நேஷனல் கூட்டணி வெற்றி பெறுமானால் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி திங்கிடகிழமை சிலாங்கூர் மாநிலத்திற்கு பொது விடுமுறை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சிலாங்கூர் மாநிலத்தை பக்காத்தான் ஹராப்பான் தலைமையிலான மாநில அரசாங்கம் நான்காவது முறையாக தற்காத்துக்கொள்ளும் இந்த மகத்தான வெற்றியை மாநில மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் சிலாங்கூர் மாநிலத்திற்கு பொது விடுமுறை வழங்கப்படும் என்று மாநில மந்திரி புசார் டத்தோ செரி அமிருடி ஷாரி தெரிவித்துள்ளார். சிலாங்கூர் மாநிலத்தைத்தை பக்காத்தான் ஹராப்பான் கடந்த 2008 ஆம் ஆண்டிலிருந்து தற்காத்து வருகிறது.