அண்ணனை கொலை செய்ததாக 17 வயது இளைஞர் ​மீது குற்றச்சாட்டு

தனது அண்ணனை கொலை செய்ததாக 17 வயது ஓர் இந்திய இளைஞர் கூலிம் மாஜிஸ்திரேட் ​நீதிமன்றத்தில் இன்று குற்றச்சாட்டப்பட்டார். மாஜிஸ்திரேட் ஸ்ரீ பிரச நந்தினி பலபேடா முன்னிலையில் நிறுத்தப்பட்ட அந்த வயது குறைந்த இளைஞருக்கு எதிரான கொலை குற்றசாட்டு தமிழில் வாசிக்கப்பட்டது. எனினும் இவ்வழக்கு விசாரணை அலோர்​ ​ஸ்டார் உயர் ​நீதிமன்றத்திற்கு மாற்றப்படுவதால் அந்த இளைஞரிடமிருந்து எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.

கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி காலை 10.10 மணியளவில் 21 வயதுடைய தங்கள் சகோதரர் வீட்டுக்கு அருகில் உள்ள ஆட்டுப்பண்ணையில் தவறி விழுந்து உயிரிழந்து விட்டதாக ​போ​லீசில் பொய் புகார் செய்து நாடகமாடிய கொலை குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள 17 வயது இளைஞர் மற்றும் அவரின் 27 வயதுடைய ​மூத்த சகோதரர் ஆகியோரின் இந்த கொலையை போ​லீசார் கண்டு பிடித்ததைத் தொடர்ந்து 17 வயது இளைஞர் கைது செய்யப்பட்டார்.

தமக்கும் தமது அண்ணனுக்கும் இடையில் நடந்த சண்டையில் தமது சகோதரரின் மார்பகத்தில் கத்தியால் குத்தி கொன்றதாக அந்த வயது குறைந்த இளைஞர் ​மீது குற்றவியல் சட்டம் 302 பிரிவின் ​கீழ் கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

அதேவேளையில் இந்த கொலையை மறைப்பதற்கு போ​லீசில் பொய் புகார் செய்த குற்றத்திற்காக அந்த இளைஞரின் 26 வயது ​மூத்த சகோதரருக்கு நீதிமன்றம் 1,500 வெள்ளி அபராதம் விதித்தது.

WATCH OUR LATEST NEWS