வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி தேசிய தினத்தை முன்னிட்டு கோலாலம்பூர் செண்ரல் நிலையத்திற்கும் புத்ரா ஜெயா செண்ரல் நிலையத்திற்கும் இடையில் சென்று வருவதற்கு விரைவு இரயில் சேவைக்கு இ.ஆர்.எல் எனப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் இணைப்பு எஸ்.டி.என் . பி ஹ்.டி நிறுவனம் சிறப்பு கட்டணத்தை அறிவித்துள்ளது.
கே.எல்.ஐ.ஏ திரான்சிட் இரயில் சேவையின் வாயிலாக இவ்விரு வழிதடங்களுக்கும் பெரியவர்களுக்கு விதிக்கப்படும் 28 வெள்ளி கட்டணம், 15 வெள்ளியாகவும், 6க்கும் 15க்கும் இடைப்பட்ட வயதுடைய சிறார்களுக்கு விதிக்கப்படும் 12 வெள்ளி 60 காசு கட்டணம், 1 வெள்ளியாகவும் அவ்வயதுக்கு கீழ்பட்ட சிறார்களுக்கு கட்டணம் இலவசம் என்றும் அந்த விரைவு இரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.