கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் தற்போது நடைபெற்று வரும் 1எம்.டி.பி நிதிமுறைக்கேடு தொடர்பாக தமக்கு எதிரான வழக்கை ஒத்தி வைக்குமாறு முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக் செய்து கொண்ட விண்ணப்பத்தை புத்ரா ஜெயா, அப்பீல் நீதிமன்றம் நிராகரித்தது.
1எம்.டி.பி க்கு சொந்தமான 230 கோடி வெள்ளி நிதிமுறைக்கேடு குற்றச்சாட்டு தொடர்பாக தற்போது நடைபெற்று வரும் வழக்கு விசாரணையை நஜிப் எதிர்கொண்டாக வேண்டும் என்று மூவர் அடங்கிய நீதிபதி குழுவிற்கு தலைமையேற்ற நீதிபதி டத்தோ ஹதாரியா சையத் இஸ்மாயில் தமது தீர்பில் தெரிவித்தார்.
உயர் நீதிமன்ற வழக்கில் விசாரணை நீதிபதி டத்தோ கோலின் லவ்ரேன்ஸ் செக்குய்ரா -வை வழக்கில் இருந்து நீக்குவதற்கு தாம் செய்து கொண்ட விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து அதன் மீதான மேல் முறையீடு முடிவடையும் வரையில் இவ்வழக்கு ஒத்திவைக்கப்பட வேண்டும் என்று நஜிப் அப்பீல் நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்திருந்தார்.