அம்னோ தலைவர் டத்தோ ஶ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி அக்கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகாதவரையில் அக்கட்சியில் நிலவிவரும் உட்பூசலுக்கும், பிளவுகளுக்கும் இப்போதைக்கு தீர்வு காணமுடியாது என்று சிந்தனை குழாம் அமைப்பு ஒன்று கூறுகிறது.
பாரிசான் நேஷனலின் தலைவருமான ஜாஹிட் ஓர் உறுதியான முடிவை எடுக்கும்வரையில் அம்னோ உறுப்பினர்கள் ஒதுங்கியிருப்பதும், தேர்தலில் வாக்களிக்காமல் இருப்பதும் ஒரு தொடர்க்கதையாக இருந்துவரும் என்று இல்ஹாம் மையம் ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
அதே வேளையில் ஜாஹிட்டின் விலகல் மூலம் அம்னோவில் பெரும் மாற்றம் ஏற்பட்டுவிடாது, மாறாக, அந்த மலாய்க்காரர்களின் கட்சியில் மிகப்பெரிய மாற்றத்தை அல்லது சீரமைப்பை உருவாக்கினால் மட்டுமே அக்கட்சி பழைய செல்வாக்கை பெறமுடியும் என்று அந்த மையத்தின் ஆய்வாளர் முஜிபு அப்துல் முயிஸ் கூறுகிறார்.