ஹடிஸ் 40 இமாம் நவாவி சமயப்பாடத்தை பள்ளிகளில் நடைமுறைப்படுத்தும் திட்டத்தை தற்காலிகாமக ஒத்திவைக்குமாறு அரசாங்கத்தை , மசீச. கேட்டுக்கொண்டுள்ளது. இந்த பாட முறை குறித்து முதலில் அமைச்சரவையில் விரிவாக விவாதிக்கப்பட வேண்டும் என்று மசீச சமய விவகாரப்பிரிவு தொடர்புக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த பாடத் திட்டத்தில் முஸ்லம் அல்லாத மாணவர்கள் கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவாதம் அளித்த போதிலும், அந்த சமயப்பாட முறையை அமல்படுத்தப்படுவதற்கு முன்னதாக அமைச்சரவையில் விரிவாக விவாதிக்கப்பட வேண்டும் என்று மசீச.வின் சமயவிவகாரப்பிரிவுத் தலைவர் காலி டிங் ஜாவோ சோங் கேட்டுக்கொண்டுள்ளார்.
அந்த சமயப்பாடத்திட்டத்தை சமயப்பள்ளிகளில் மட்டுமே அறிமுகப்படுத்த வேண்டும், அரசாங்கப்பள்ளிகளில் ஒரு போதும் கூடாது என்று அமைச்சரவை ஒப்புதல் அளித்தப் பின்னரே அப்பாட முறையை அமல்படுத்துவதற்கு குறித்து அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என்று காலி டிங் வலியுறுத்தியுள்ளார்.