கடந்த வாரம் வியாழக்கிழமை சுங்கை பூலோ, எல்மினாவில் பத்து பேர் உயிரிழந்த இலகு ரக விமான விபத்து தொடர்பாக இதுவரையில் பத்துக்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ உசேன் உமர் கான் தெரிவித்தார்.
அந்த இலகு ரக விமானம் விழுந்து நொறுங்கிய காட்சியை பதிவு செய்த காணொளியை கொண்டுள்ளவர்கள், விமான நிறுவனப்பொறுப்பாளர்கள் மற்றும் மலேசிய வான் போக்குவரத்து இலாகா அதிகாரிகள் ஆகியோர் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டவர்களில் அடங்குவர் என்று டத்தோ உசேன் உமர் கான் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விசாரணையில் முன்னேற்றம் ஏதும் தென்பட்டுள்ளதா? என்பதை கண்டறிய மலேசிய வான் போக்குவரத்துத்துறையின் அடுத்த உத்தரவிற்காக போலீசார காததிருப்பதாக அவர் தெவித்தார்.