வரும் ஆகஸ்ட 31 ஆம் தேதி டத்தாரான் புத்ராஜொயிவில் கொண்டாடப்படவிருக்கும் 2023 ஆண்டுக்கான சுதந்திர தின விழாவில் கலந்து கொள்ளவிருக்கும் பொது மக்கள் பாத்தேக் அணிவது ஊக்குவிக்கப்படுவர் என்று தொடர்பு, இலக்கவில் அமைச்சர் ஃபாஹ்மி ஃபட்சில் தெரிவித்துள்ளார். பாத்தேக் ஆடைகளை ஊக்குவிப்பது மூலம் உள்நாட்டு பாத்தேக் தொழில்துறையினருக்கு மிகப்பெரிய ஆதரவை அளிக்க முடியும் என்று ஃபாஹ்மி ஃபட்சில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மெர்டேக்கா கொண்டாட்டத்தின் போது அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள், நிகழ்ச்சி ஏற்பாட்டு செயலகத்தின் பணியாளர்கள் அனைவரும் பாத்தேக் ஆடையை அணிந்திருப்பர் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.