கோலாலம்பூர் ஜாலான் புக்கிட் பிந்தாங்கில் உள்ள பேரங்காடி மையம் ஒன்று , தனது ஆண்டு விழாவையொட்டி மேற்காசிய கவர்ச்சி நடனமான பெல்லி நடன நிகழ்வை பொதுவில் நடத்தியதற்காக அந்த பேரங்காடி மையத்தை தற்காலிகாமக மூடுவதற்கு கோலாலம்பூர் மாநகர் மன்றம் உத்தரவிட்டுள்ளது. அரைகுறை ஆடையில் இளம் நங்கையர்களின் இடையாட்டம், சமுக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டதைத் தொடர்ந்து அந்த பேரங்காடி மையம், தனது வர்த்தக அனுமதிக்கான நிபந்தனைகளை மீறிவிட்டதாக கோலாலம்பூர் மாநகர் மன்றம் குற்றஞ்சாட்டியுள்ளது. கடந்த ஜுலை 5 ஆம் தேதி நடைபெற்ற இந்த பெல்லி நடன நிகழ்வு, அப்பகுதி மக்களை முகசுளிப்பில் ஆழ்த்தியதாக கூறப்படுகிறது.