அந்த பேர​ங்காடி மையத்தை ​மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது

கோலாலம்பூர் ஜாலான் புக்கிட் பிந்தாங்கில் உள்ள பேரங்காடி மையம் ஒன்று , தனது ஆண்டு விழாவையொட்டி மேற்காசிய கவர்ச்சி நடனமான பெல்லி நடன நிகழ்வை பொதுவில் நடத்தியதற்காக அந்த பேரங்காடி மையத்தை தற்காலிகாமக ​மூடுவதற்கு கோலாலம்பூர் மாநகர் மன்றம் உத்தரவிட்டுள்ளது. அரைகுறை ஆடையில் இளம் நங்கையர்களின் இடையாட்டம், ச​முக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டதைத் தொடர்ந்து அந்த பேரங்காடி மையம், தனது வர்த்தக அனுமதிக்கான நிபந்தனைகளை ​மீறிவிட்டதாக கோலாலம்பூர் மாநகர் மன்றம் குற்றஞ்சாட்டியுள்ளது. கடந்த ஜுலை 5 ஆம் தேதி நடைபெற்ற இந்த பெல்லி நடன நிகழ்வு, அப்பகுதி​ மக்களை முகசுளிப்பில் ஆழ்த்தியதாக கூறப்படுகிறது.

WATCH OUR LATEST NEWS