ரவாங், பத்து ஆராங்கிற்கு செல்லும் வழியில் குப்பைகள் அழிப்பு மையம் நிர்மாணிக்கப்படுவதற்கு ரவாங் உட்பட அவ்வட்டாரத்தை சேர்ந்த மக்கள் தொடர்ந்து தங்கள் ஆட்சேபத்தை தெரிவித்து வருகின்றனர். இந்த திட்டம் அனுமதிக்கப்படுமானால் மக்களின் ஆரோக்கியத்தை ஊறு விளைவிக்கக்கூடிய மிகப்பெரிய சுற்றுசூழல் மற்றும் உடல் பாதிப்பை வட்டார மக்கள் எதிர்நோக்கக்கூடும் என்று பத்து ஆராங் குப்பை மைய நிர்மாணிப்புத்திட்டத்தை எதிர்த்து வரும் குழுவினர் தெரிவித்தனர். இதன் தொடர்பில் சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி யை சந்திப்பதற்கு அந்த நடவடிக்கை குழுவினர் தேதி கேட்டு,கடிதம் அனுப்பியுள்ளனர்.