நாட்டில் உள்ள சிறைச்சாலைகள் போதைப்பித்தவர்களை திருத்துவதற்கும், அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கும் உரிய இடம் அல்ல. மாறாக, அவை பொது சுகாதாரத்தை அடிப்படையாக கொண்ட அணுகுமறைக்கான ஒரு கூடமாக விளங்கிட வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஜாலிஹா முஸ்தபா கேட்டுக்கொண்டுள்ளார். சிறைச்சாலையின் ஒரு பகுதி போதைப்பித்தர்களுக்கு சிகிச்சை மற்றும் மறுவாழ்வுக்காக ஒதுக்கப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
ஆனால், அந்த வசதிகள் அவர்கள் மறுபடியும் சமூகத்தில் இணைவதற்கான ஒரு சூழல் ஏற்படுமா? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் டாக்டர் ஜாலிஹா குறிப்பிட்டார். சிறைச்சாலையில் அடைக்கப்படும் போதைப்பித்தர்களுக்கு பொது சுகாதார ரீதியாக முன்னுரிமையும், முக்கியத்துவமும் வழங்கப்பட வேண்டும் என்று அமைச்சர் விளக்கினார்.
கோலாலம்பூரில் போதைப்பித்தர்களின் உளவியல் மற்றும் தடயவில் கண்காட்சியில் உரையாற்றுகையில் டாக்டர் ஜாலிஹா மேற்கண்டவாறு கூறினார்.