சட்டத்துறை தலைவர் டான் ஸ்ரீ இட்ரஸ் ஹாருன் னின் பணி ஒப்பந்த காலம் வரும் செப்டம்பர் 6 ஆம் தேதியுடன் முடிவடைவதைத் தொடர்ந்து அவர் விடுப்பில் சென்றுள்ளதாக அறியப்படுகிறது. தமக்கு இருக்கும் வருடாந்திர விடுமுறைகளை எடுத்துக்கொள்ளும் வகையில் விடுப்பில் சென்றுள்ள இட்ருஸ் ஹரூணின் ப ணிகளை புதிய சட்டத்துறை தலைவராக நியமிக்கப்படலாம் என்று கூறப்படும் கூட்டரசு தலைமை வழக்குரைஞர் டத்தோ டெரிருடின் முகமட் ஹாருன் கவனித்து வருவதாக கூறப்படுகிறது. சட்டத்துறை தலைவராக கடந்த 2022 ஆம் ஆண்டு மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்ட இட்ருஸ் ஹரூனின் பதவிக்காலம், பின்னர் மார்ச் 6 ஆம் தேதி மேலும் 6 மாத காலத்திக்கு நீட்டிக்கப்பட்டது.