2012 ஆம் ஆண்டு சிறப்பு நடவடிக்கைகக்கான பாதுகாப்பு சட்டமான சொஸ்மவில் செய்யக்கூடிய எந்தவொரு சட்டத் திருத்தமும்,மனித உரிமை பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதாக இருக்க வேண்டும் என்று மனித உரிமைக்கான ஆசியான் நாடளுமன்ற உறுப்பினர்கள், புத்ராஜெயாவை கேட்டுக்கொண்டுள்ளர். அந்த கொடுங்கோல் சட்டம், நடப்பு சட்டத்தை வளப்படுத்துவதாக இருக்க வேண்டுமே தவிர, அந்த சட்டம் பாதிக்கப்பட்வர்களக்கு மேலும் வினையை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கக்கூடாது என்ற அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
விசாரயின்றி கைதிகளை குறிப்பிட்ட காலத்திற்கு தடுத்து வைப்பதற்கு போலீஸ் துறைக்கு அதிகாரம் வழங்கும் சொஸ்மா சட்டத்தின் கீழ் பிடிபடுகின்றவர்களை ஜாமீனில் அனுமதிப்பது உட்பட சில திருத்தங்கள் செய்யப்படவிருப்பதாக சட்டத்துறை துணை அமைச்சர் ராம் கர்ப்பால் சிங் அறிவித்து இருப்பது தொடர்பில் அந்த அனைத்துலக அமைப்பு இக்கோரிக்கையை முன்வைத்துள்ளது.
சொஸ்மா சட்டத்தில் ஜாமீன் வழங்குவதற்கு ஏதவாக அச்சட்டத்தின் 13 ஆவது விதி முக்கியமாக திருத்தப்படும் என்பதையும் ராம் கர்ப்பால் சுட்டிக்காட்டியிருந்தார்.