மலேசியாவில் கர்ப்பிணிப் பெண்களுக்கு தெதானுஸ் – டிவ்தெரியா – பெர்துஸ்ஸிஸ் நோய் தடுப்பிற்குரிய தடுப்பு ஊசி முறையை சுகாதார அமைச்சு அடுத்த ஆண்டில் அறிமகப்படுத்தவிருப்பதாக அதன் அமைச்சர் டாக்டர் ஜாலிஹா முஸ்தபா தெரிவித்துள்ளார்.
கர்ப்பிணிப் பெண்களின் சுகாதார நலன் பேணும் இந்த திட்டமானது, 5 மாதத்திற்கும் குறைவான குழந்தைகள் மத்தியில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்ய வல்லதாகும் என்று அமைச்ச்ர விளக்கினார். 5 மாதத்திற்கும் குறைவான குழந்தைகள் மத்தியில் நோய்கள் தாக்கும் அபாயம் இருப்பதால் குழந்தை பிரசவத்திற்கு முன்னதாகவே இந்த தடுப்பூசி கர்ப்பிணிப் பெண்களுக்கு செலுத்தப்படும் என்று டாக்டர் ஜாலிஹா குறிப்பிட்டார்.