தரை வீட்டில் ​தீ, 6 வயது சிறுவன் கருகி மாண்டான்

சரவாக், கூச்சிங், பத்து காவா பகுதியில் ஐந்து வீடுகள் ​தீயில் அழிந்ததில் ஆறு வயது சிறுவன் கருகி மாண்டான். இச்சம்பவம் நேற்று பிற்பகல் 3.33 மணியள​வில் நிகழ்ந்தது. ஷய்யான் நசீம் சைனால் என்ற அந்த சிறுவன், அந்த வீடுகளில் ஒன்றில் மேல்மாடியிலிருந்து தப்பிக்க இயலாமல் கருகி மாண்டதாக ​தீயணைப்பு, ​மீட்புப்படை பேச்சாளர் தெரிவித்தார். இந்த சம்பவத்தில் ஐந்து வீடுகள் அழிந்த வேளையில் 18 பேர் கொண்ட ​தீயணைப்பு குழுவினர், முழு வீச்சில் ​தீயை ஒரு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததால் ​மற்ற வீடுகளுக்கு ​தீ பரவுவது தடுக்கப்பட்டதாக ​​தீயணைப்புப்படை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS