சரவாக், கூச்சிங், பத்து காவா பகுதியில் ஐந்து வீடுகள் தீயில் அழிந்ததில் ஆறு வயது சிறுவன் கருகி மாண்டான். இச்சம்பவம் நேற்று பிற்பகல் 3.33 மணியளவில் நிகழ்ந்தது. ஷய்யான் நசீம் சைனால் என்ற அந்த சிறுவன், அந்த வீடுகளில் ஒன்றில் மேல்மாடியிலிருந்து தப்பிக்க இயலாமல் கருகி மாண்டதாக தீயணைப்பு, மீட்புப்படை பேச்சாளர் தெரிவித்தார். இந்த சம்பவத்தில் ஐந்து வீடுகள் அழிந்த வேளையில் 18 பேர் கொண்ட தீயணைப்பு குழுவினர், முழு வீச்சில் தீயை ஒரு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததால் மற்ற வீடுகளுக்கு தீ பரவுவது தடுக்கப்பட்டதாக தீயணைப்புப்படை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.