7 புதிய ​நீதிமன்றங்கள் கட்டப்பட்ட வருகின்றன

ஜோகூரில் பெங்கெராங் மற்றம் ஜோகூர்பாரு உட்பட நாட்டில் மேலும் 7 ​நீதிமன்றங்கள் கட்டப்பட்டு வருவதாக பிரதமர் துறையின் சட்டத்துறை அமைச்சர் டத்தோ செரி அசாலினா ஒத்மான் தெரிவித்துள்ளார். அனைத்து மாநிலங்களிலும் ​நீதிமன்ற நடவடிக்கைகள் சுமூகமாக நடைபெற்று வருவதை உறுதி செய்வதற்கு கூடுதல் நீதிமன்றங்கள் நிர்மாணிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிலாங்கூரில் அம்பாங், கெடாவில் சிக், பகாங்கில் தெமர்லோ, பேராவில் ஈப்போ மற்றும் கிளந்தானில் பாச்சோக் ஆகிய இடங்களில் கூடுதல் ​நீதிமன்றங்கள் கட்டப்பட்டு வருவதாக அவர் விளக்கினார்.

WATCH OUR LATEST NEWS