ஆகஸ்ட் 31 ஆம் நாள் மலேசிய தேசிய தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு பெர்படானான் புத்ராஜாயாவில் இலவச பஸ் சேவை

வருகின்ற ஆகஸ்ட் 31 ஆம் நாள் மலேசிய தேசிய தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு
பெர்படானான் புத்ராஜாயாவில் இலவச பஸ் சேவையை ஏற்பாடு செய்துள்ளது. இந்த 66 வதுதெசிய தினக் கொண்டாட்ட விழாவில் ஏறக்குறைய 100,000 பேர் மக்கள் டத்தாரான் பெர்டானாவில் ஒன்றுக் கூடுவார்கள் என எதிர்பார்க்கப் படுவதால், டத்தாரான் பெர்டானாவிற்கு செல்வதற்காக 50 இலவச பஸ் சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

டெர்மினல் புத்ராஜெயா சென்ட்ரல் ரயில் சேவை மையத்திலிருந்து பொது மக்களை ஏற்றிக் கொண்டு ப்ரெசின்ட் 3 துவான்கு அப்துல் ரஹ்மான் சாலையில் மீண்டும் இறக்கப்படுவார்கள். அதே போன்று புத்ராஜாயா இன்டெர்னேஷ்னல் கொன்வென்ஷன் சென்டரில் பொது மக்களை ஏற்றி மீண்டும் ப்ரெசின்ட் 3 ஜாலான் துன் ஹுசெயினில் இறக்கப்படுவர் என பெர்படானான் புத்ராஜாயாவில் தனது அறிக்கையில் கூறி உள்ளது.

WATCH OUR LATEST NEWS