தனது மோட்டார் சைக்கிளினால் மோதப்பட்டு, கீழே விழுந்த நபரை, கண்மூடித்தனமாக தாக்கியதாக கூறப்படும் மேற்சட்டை அணியாத மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் சம்பந்தப்பட்ட காணொளி ஒன்று நேற்று சனிக்கிழமை முதல் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருவதாக காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமட் ஜெய்த் ஹாசன் தெரிவித்தார்.
இச்சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை காலை 11.25 மணியளவில் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.சாலை சந்திப்பில் திடீரென்று நுழைந்த மோட்டார் சைக்கிளோட்டியை மோதி தள்ளியதாக கூறப்படும் சட்டை அணியாத நபர், கீழே விழுந்த நபரை கண்மூடித்தனமாக தாக்கும் காட்சி, காரின் டாஷ்போட் கேமராவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக தாங்கள் இதுவரையில் எந்தவொரு போலீஸ் புகாரையும் பெறவில்லை என்று ஜெய்த் ஹாசன் மேலும் விளக்கினார்.